Posts

துலா ஸ்நானம்

Image
 துலா ஸ்நானம்  ஐப்பசி முதல் தேதியன்று காவேரி நதியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர். துலாமாதமான ஐப்பசியில் உலகிலுள்ள அறுபத்தாறு கோடி தீர்த்தங்களும், பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரி நதியில் சங்கமமாவதால், அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன், இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. துலாக் காவேரியின் நீர்த்திவலைகள் ஒவ்வொன்றும் புண்ணிய தீர்த்தமாகும். அதிலுள்ள மணல்கள் எல்லாம் தேவதைகள். அதனால்தான் உலகிலுள்ள புனித நதிகள் அனைத்தும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, மக்கள் தங்களிடம் கரைத்த பாவக் கறைகளைக் கழுவி புனிதமடைகின்றன. துலா மாதத்தில் காவேரியில் நீராடுபவர்கள், தங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து, மூன்று கோடி உறவினர்களையும் கடைத்தேற்றுகிறார்கள். மேலும் துலா மாதத்தில் காவேரியில் நீராடி, முன்னோர்களுக்கு பிதுர்பூஜை செய்து அன்னதானம், ஆடை தானம் அளித்தால் பித்ருக்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். அழகு, ஆயுள், ஆரோக்கியம், சொல்வளம், கல்வி, வாழ்வில் சுகம் என எல்லாம் கிட்டுமென்று துலாக் காவேரி மகாத்மி...

அன்றாடம் பண வரவு பெற

Image
 ☘அன்றாடம் பண வரவு பெற☘ ••••••••••••••••••••••••••• காலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி,  நாவை வாயின் மேல் புறம் படுமாறு மடக்கி வைத்து கொண்டு வாய் மூடி, மனதினுள்    🔯    "ஏராளம் தனம் தான்யம் தாராளம் தாராளம்"        🔯 ————————— என்ற மந்திரத்தை 6 முறை ஜெபித்து பின் கண்கள் மூடிய நிலையில் வாய் திறந்து நீரில் ஊதவும். பின் அந்த நீரை குடித்து விடவும். நாள் முழுதும் எதிர்பார்த்த, எதிர்பாராத பணவரவு, நற்செய்திகள் மற்றும் உயர்வுகள் கொடுக்கும் சக்தி வாய்ந்த முறை இது. அனுதினமும் தேவைகள் உள்ள வரை செய்து வரலாம்.

கண் திருஷ்டி

Image
கண் திருஷ்டியால் அவஸ்தைப்படுகிறீர்களா? ✡எப்படிகண்டுபிடிப்பது? : இதோ தீர்வு... திருஷ்டிப்பட்டவர் உடலில் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி வரும். எந்த வேலையிலும் மனம் லயிக்காது. எதாவது புது உடை அணிந்தால் அது கிழியலாம். சில சமயம் அதில் எதாவது கருப்புக்கறை படலாம். வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும். கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும். தூக்கம் அதிகமாகலாம் சப்பாடு பிடிக்காமல் போகலாம். அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும். கிடைக்கும் சந்தர்ப்பத்தில் இருந்த விஷயங்கள் எல்லாம் கை நழுவிப் போகும். 🕉கவனிக்க : திருஷ்டிக்கழிக்க அந்தி சாயும் நேரம் உகந்தது. திருஷ்டிக் கழிப்பவர் திருஷ்டி சுற்றிக்கொள்பவரைவிட வயதில் மூத்தவராக இருந்தல் அவசியம். திருஷ்டிக்கழிக...

ஓம் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர்

Image
 ஓம் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவாய நம 🙏🏻🙏🏻 || ஸகல கலைகளிலும் ஞானம் தரும் ஸ்ரீஹயக்ரீவரின் வழிபாடுகள் பற்றி அறிவோமா || 1. ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாளின் பார்வை, அடியார்கள் அனைவரையும் குளிரச் செய்யும் ஆற்றல் கொண்டதாக எண்ணற்ற புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.  2. ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 ஸ்துதிகள் கொண்டது. இந்த 33 ஸ்துதிகளையும் பொருள் உணர்ந்து பாராயணம் செய்தால், அவர்கள் 64 கலைகளிலும் தேர்ச்சி பெற முடியும்.  3. ஹயக்ரீவர் எழுப்பும் "ஹலஹல'' என்ற கனைப்பு சத்தம் எல்லை இல்லாத வேதாந்த உண்மைகளை உணர்த்துவதாக சொல்கிறார்கள். 4. ஹயக்ரீவர் மூல மந்திரத்தை நாம் வாய்விட்டு சத்தமாக சொன்னால், அதை ஹயக்ரீவர் நம் அருகில் நேரில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவார். 5. ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள் எந்த கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை கைவரப் பெறுவார்கள். 6. பக்தர்கள் நல்வழிப் பெறுவதையே கடமையாகக் கொண்டுள்ள ஸ்ரீஹயக்ரீவர் ஞான வடிவமாகவும், கருணைக் கடலாகவும் உள்ளார். 7 உலகம் புகழும் படியான நூல்களை இயற்றிய விஷ்ணுவின் அம்சமான வியாச முனிவருக்கு, அதே விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீஹயக்ரீவர் வழங்கிய அருளே க...

மஹா ப்ரத்யங்கிரா

Image
 சக்தியின் உக்கிரமான வடிவம்தான்  _மஹா_பிரத்யங்கரா.  இந்த பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடு எட்டு கைகளோடு, மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காட்சி தருபவள்  பிரத்யங்கிரா தேவி இவளை நம்பி வணங்கும் பக்தர்களை காப்பாற்றி எல்லாவிதமான ஐஸ்வர்யங்களையும் கொடுக்கிறாள் பிரத்யங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்தக் காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும். பிரம்மானந்தத்தை அடைந்தவனுக்கு ஒரு விதமான பயமுமில்லை என்பது ச்ருதி வாக்கியம். ஸம்ஸாரமே பயங்கரமானது. இதிலிருந்து அம்பிகை விடுவிக்கிறாள். அகசம்பந்தமான பாவங்களை நீக்கக்கூடியவள் இவள். சம்சார பந்தத்திலிருந்து மீட்டு மோட்சம் தரக்கூடிய தேவதையும் இவளே.அம்பிகையை பைரவரே பூஜித்ததால் அம்பிகை மஹாபைரவபூஜிதா என்று வணங்கப்படுகிறாள். இது பத்மபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பைரவர்களின் அத்தனை வடிவங்களுக்கும் சக்தியாக விளங்கி திருவருள் புரிபவள் பிரத்யங்கிரா. லலிதாம்பிகை திருவருள் புரியும் ஸ்ரீபுரத்தின் 22, 23ம் பிராகாரங்களுக்கு நடுவில் மார்த்தாண்ட பைரவர் வசிப்பதாக சொ...

பஞ்ச வில்வம்

Image
சிவனுக்குகந்த பத்திரங்கள் - பஞ்சவில்வம் அவை :  1. வில்வம்  2. நொச்சி 3. முட்கிளுவை 4. விளா 5. மாவிலங்கை (அ)      முல்லை (6) மஹாவில்வம். இவை அனைத்தும் சிவனின் முக்கண்கள், முக்குணங்கள் மற்றும் மும்முனை கொண்ட திரிசூலத்தினையும் குறிக்கும் பத்திரங்கள். இவைகளால் அர்ச்சனையும் அபிஷேகமும் செய்வதால் மூன்று ஜென்ம பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது. சிவ  சிவ....

கிரிவலம்

 கிரிவலச் சிறப்பு :  திருஅண்ணாமலையில் சாட்சாத் சிவபெருமானே பூரண யோக சித்தலிங்க மலை வடிவில் காட்சியளிப்பதால் மலையைச் சுற்றி வலம் வருவதுதான் மிகச் சிறந்த வழிபாடு ஆகிறது. இன்றைக்கும் பலகோடி சித்தர்களும், மஹான்களும், யோகியர்களும் தினந்தோறும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த வண்ணம் இருக்கின்றனர். இப்பூவுலகில் பல மலைவலங்கள் இருந்தாலும் இரண்டு மலைவலங்கள்தான் மிகவும் தெய்வீக ஈர்ப்பு வாய்ந்தவையாக முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஒன்று இமயமலையில் கைலாய கிரிவலம்; மற்றொன்று திருஅண்ணாமலை கிரிவலம். திபெத் நாட்டில் தெய்வீகப் பெருவாழ்வு வாழ்கின்ற ‘லாமாக்கள்' (Lamas) எனப்படும் அற்புதமான யோகியர்கூட இன்றும் பூத உடலால் (Physical Body) திருக்கயிலாய மலையையும், சூட்சும சரீரத்தால் (Spiritual Body) திருஅண்ணாமலையையும் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர். துமட்டுமா? அந்தந்த கிழமைக்குரிய கிரஹாதிபதிகளும், நட்சத்திர தேவதைகளும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதுண்டு. புழுக்கள், விலங்கினங்கள், தாவரங்கள், வண்டினங்கள் என ஒவ்வொரு ஜீவராசிக்கும் உரித்தான தேவதைகளும் தங்கள் இனத்தின் நலம் திருஅண்ணாமலையை வலம் வருகின்றன. வேண்டித் ஸ்ரீஆஞ்ச...

தன்வந்திரி 108 போற்றி

Image
 ஏற்கனவே இருந்த நோய்களும் இனி நோய் வராமல் இருக்கவும் சொல்ல வேண்டிய தன்வந்திரியின்_108_போற்றிகள். நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பவர் தன்வந்திரி பகவான் ஆவார். தன்வந்திரி பகவான் வழிபாடு செய்பவர்களுக்கு ஏற்கனவே உடலில் இருக்கும் நோய்களும், இனி வர இருக்கும் பிணிகளும் தீரும் என்பது நம்பிக்கை. மனித குலத்திற்கு ஆயுர்வேதத்தை அளித்த தன்வந்திரி பகவான்! பாற்கடலில் இருந்து தோன்றிய அமிர்த கலசத்தில் இருந்து உருவானவர் தன்வந்திரி பகவான் ஆவார். தினமும் இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் கூட போதும்! எவ்விதமான நோய்களும் நம்மை அண்டுவதில்லை என்கிறது சாஸ்திரம். தன்வந்திரி பகவான் 108 போற்றியை இப்பதிவில் காணலாம். தன்வந்திரி_108_போற்றி 1. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி! 2. ஓம் திருப்பாற்கடலில் உதித்தவரே போற்றி! 3. ஓம் தீர்க்காயுள் தருபவரே போற்றி! 4. ஓம் துன்பத்தை துடைப்பவரே போற்றி! 5. ஓம் அச்சம் போக்குபவரே போற்றி! 6. ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி! 7. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி! 8. ஓம் அன்பு கொண்டவரே போற்றி! 9. ஓம் அமரர் தெய்வமே போற்றி! 10. ஓம் அகிலம் புகழ்வோனே போற்றி! 11. ஓம் அட்சய பாத்திரமே போற்றி! 12. ஓம் ...

வீரபத்திரர்

Image
 வீரபத்திரர் யார்? தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தினமும் ஈசனை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு 'வீரபத்திரர்' பற்றி தெரிந்து இருக்கும். என்றாலும் பெரும்பாலானவர்கள் வீரபத்திரர் பற்றியும், அவரது அவதார சிறப்புப் பற்றியும் அறிந்து கொள்ளாமலே உள்ளனர். 'சிவனின் ஒரு அம்சம்தான் வீரபத்திரர்' என்று ஒரே வரியில் வீரபத்திரர் பற்றி சொல்லி விடலாம்.  ஆனால் அந்த அவதார சிறப்பை நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சிவனின் 64 வடிவங்களில் ஒரு வடிவான வீரபத்திரர், 'அகந்தையை அகற்றி நீதியை நிலை நாட்டிட தோன்றியவர்' தவறு செய்தவனுக்கு தண்டனை தந்து நீதியை காக்கும் நீதி தேவனாக அவதரித்தவர். இது பற்றிய விவரம் வருமாறு.. தீயவர்களையும், தீயச் செயல்களையும் அழிக்க சிவபெருமான் எட்டு தடவை போர்க்கோலம் பூண்டார். இந்த 8 போர்களும் 8 இடங்களில் நடந்தன. அந்த இடங்கள்தான் அட்ட வீரட்ட தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 8 நிகழ்வுகளில் 6 தலங்களில் ஈசனே நேரடியாக சென்று போரிட்டு அசுரர்களை அழித்தார். மீதமுள்ள இரண்டில் ஈசன் நேரடியாக பங்கேற்கவில்லை.  அதற்கு பதில் தன் அரு...

நட்சத்திரங்களுக்கு உரிய மூல மந்திரங்கள்

Image
 *** அவரவர்களுடைய பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் ;---.  1. அஸ்வினி நட்சத்திரம் - மேஷ இராசி:                         ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ போகர் மகரிஷியே நம: 2. பரணி நட்சத்திரம் - மேஷ இராசி:                        ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹ்ணாங் ஹ்ரீங் ஸ்ரீ கோரக்க சித்தரே நம: 3. கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் - மேஷ இராசி:                         ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ போகரிஷியே நம: 4. கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம் - ரிஷப இராசி:                          ஓம் ஸ்ரீம் றம் டம் ஹ்ரீங் ஸ்ரீ மச்சமுனிவரே நம: 5. ரோகிணி நட்சத்திரம் - ரிஷப இராசி:                           ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ வான்மீகரே நம: 6. மிர...

அஷ்டதிக் பாலகர்கள்

Image
 அஷ்டதிக் பாலகர்கள் இந்திரன்      *திசை:கிழக்கு* *பத்தினி:இந்திராணி,(சசிதேவி)* *வாகனம்:வெள்ளை யாணை* *ஆயுதம்: வஜ்ராயுதம்*     *த்யானம்* _________________ *||ஐராவத கஜாரூடம் ஸ்வர்ண வர்ணம் கிரீடினம்,|* *|ஸஹஸ்ர நயனம் சக்ரம் வஜ்ர பாணிம் விபாவயேத்||* ____________________________       *அக்நி*      ____________ *திசை: தென்கிழக்கு* *பத்தினி: ஸ்வாஹாதேவி* *வாஹனம்: ஆட்டுக்கிடா* *ஆயுதம்:அக்னி ஜ்வாலையுடன் கூடிய வேல்*      *த்யானம்*       ___________ *||ஸப்தார்சிஷஞ்ச பிப்ராணம் அக்ஷமாலாம் கமண்டுலம்|* *|ஜ்வாலா மாலா குலம் ரக்தம் ஸக்தி ஹஸ்தஞ்ச காநஸம்||* ____________________________      *யமன்* ________________ *திசை:தெற்கு* *பத்தினி: குபேரஜாயை* *வாகனம்: எருமைக்கிடா* *ஆயுதம்: பாசக்கயிறு* *சூரியனின் குமாரன்,* *சனியின் சகோதரர்,* *சகோதரி: யமி,,or (யமுனை)*     *த்யானம்*      ____________ *||க்ருதாந்தம் மஹிஷாரூடம் தண்டஹஸ்தம் பயாநகம்|* *|காலபாஸ தரம் க்ருஷ்ணம் த்யாயேத் தக்ஷிண திக்பதிம்...

அரைஞாண் கயிறு (அரணாக்கொடி)

Image
 *வெள்ளி அரணாக்கொடி* இதை பழைய காலத்தில் குடியானவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் அணிவர்.. குடியானவர் குடும்பம் மட்டுமே இல்லை கொஞ்சம் வசதி படைத்த நம் தாத்தா வயதில் தந்தை வயதில் இருந்த அனைவரும் அதை அணிந்து கொண்டு இருப்பதை பார்த்தும் இருப்பீர்கள்.... என்ன அவர்கள் அனைவரும் அதை அணிந்து கொண்டு இருந்த போது அவர்கள் அனைவரும் கோமணம் (விவசாய காட்டில் வெள்ளையும் சொள்ளையுமா சுத்த முடியாதே???) அணிந்து மட்டுமே இருப்பார்கள்.. இதை பார்த்து பார்த்து பழகி இன்றைய பேரன்மார்கள்  இப்பொழுது வெள்ளி அரணாக்கொடி என்பது ஏதோ தீண்ட தகாத பொருள் போல இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது.. அரணாக்கொடி எதற்காக என்று இன்னும் நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் விதமாக இப்பதிவு.. ஆண்களின் இடுப்பில்  உரசி கொண்டே இருக்கும்  அரணா என்பது  ஆண்களின்  விந்தணு பையில் வைத்து இருக்கும் விந்தணுக்கள் எதை அழிவில்லாது காப்பாற்றி கொடுத்து அவர்களுடைய வம்ச விருத்தி செய்ய உதவுகிறது.. ஜோதிட ரீதியான அடிப்படையில் சனி பகவான் சுக்கிரன் வீடான துலா ராசியில் செல்லும்போது உச்சம் அடைகிறார்.. இந்த சனி பகவான் நம் உடலில்...

துளசி மாடம்

Image
வீட்டில் துளசி இருந்தால் மகாலட்சுமி கூடவே இருப்பார்”… வீட்டுக்கு முன்னாடி கட்டாயம் வைங்க..!! ஒவ்வொரு வீட்டின் முன்பாக ஒரு துளசி செடியை வளர்த்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ஒவ்வொருவருடைய வீட்டிலும், துளசி செடி அவசியம் இருக்க வேண்டும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும். வீட்டின் முன்னே அல்லது முற்றத்திலோ வளர்க்கவும். நீரை கடவுள் பெயர் சொல்லி, தெளித்து விட்டு, வேரில் அளவோடு ஊற்றவும். வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால் எந்தச் சகுன பாதிப்பும் இல்லை. வீடுகளில் துளசிமாடம் அமைப்பதன் மூலம் பூச்சிகள் நுழையாமல் தடுக்கலாம். வீட்டில் துளசிமாடம் வைத்து வழிபடுவதன் மூலம் அன்னை மகாலட்சுமியின் அருளை மட்டுமல்ல பகவான் கிருஷ்ணரின் அருளையும் பெறலாம். பகவான் கிருஷ்ணருக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டால் கசப்பான விஷயம் அனைத்தும் முறிந்து இனிப்பான வாழ்க்கை அமையும். பெண்கள் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும்போது துளசியிடம் விடை பெற வேண்டும். பிறந்த வீட்டிற்கு வரும் போதெல்லாம் நீருற...

குழந்தை பாக்கியம்

Image
 'தப்பாமல் குழந்தைபாக்கியம் தரும் சீராளம் பொம்மை'..."  "திருச்செங்காட்டங்குடி சூளிகாம்பாள் உடனுறை உத்தராபதீசுவரர் திருக்கோயில்"..உத்ராபதியாகிய பைரவத்தொண்டருக்கு சாப்பிட சிறுத்தொண்ட நாயனார் தன் மகன் சீராளனை பலியிட்டு கறி சமைத்து கொடுத்த நிகழ்வு ஆண்டுதோறும் சித்திரை பரணி நட்சத்திர நாளில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.பிள்ளைக்கறி அமுது படையல் குங்குமப்பூ, பச்சை கற்பூரம், அரிசி மாவு கொண்டு செய்யப்படும். அதற்கு சீராளம் என்று பெயர்.மாவில் செய்த ‘சீராளம் பொம்மை’. புத்திர பாக்யத்திற்கு சீராளம் என்பார்கள். இந்த சீராளம் பற்றி ஒரு ஐதீகம்.  குழந்தை இல்லாதவர்கள் இந்த சீராளம் சாப்பிட்டால் மறுவருடத்திற்குள் குழந்தை பிறக்கும் என்கிறார்கள்.  மயிலாடுதுறையில் இருந்து 42 கி.மீ..நன்னிலத்துக்கு தென்கிழக்கே 9 கி.மீ.....திருவாரூரில் இருந்து 15 கி.மீ.

வருத்தினி ஏகாதசி விரதம்

Image
 வருத்தினி ஏகாதசி -  யாரொருவர் இந்த ஏகாதசியின் பெருமைகளை படித்தாலோ அல்லது காதால் கேட்டாலோ அவர் நிச்சயமாக ஆயிரம் பசுக்களை தானம் செய்வதின் பலனை அடைவார் மற்றும் தன் எல்லா பாவ விளைவுகளினின்றும் விடுபட்டு பகவான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைவார். ஏப்ரல் / மே மாதங்களில் தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரக்கும் இடையிலான உரையாடலின் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கூறினார். ஓ! வாசுதேவா, எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். தயவுசெய்து (ஏப்ரல்/மே) மாதங்களின் தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயரையும் அதன் பெருமைகளை பற்றியும் எனக்கு விளக்குங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார் என தருமை மன்னா, இந்த ஏகாதசியின் பெயர் வருத்தினி. இது ஒருவருக்கு இந்த வாழ்க்கையிலும் அதற்கு பிறகும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் ஒரு ஜீவன் தன் பாவ விளைவுகளை குறைத்துக்கொண்டு, நிரந்தமான ஆனந்தத்தை அடைந்து மிகுந்த பாக்கியசாலி ஆகிறான்.  இந்த விரதத்தை கடைப...

நந்தி வடிவங்கள்

Image
 காதில்லாத நந்தி, பின்னங்கால் இல்லாத நந்தி - சிவாலயங்களில் பரவசப்படுத்தும் நந்தி வடிவங்கள்!  பிரதோஷம் ஸ்பெஷல் .... ஓம் சிவாய நமஹ சிவ சிவாய நமஹ.... 'நந்தி வழிபாடு நற்கதியளிக்கும்' என்பார்கள். சிவபெருமானின் சகல அதிகாரங்களையும் பெற்றுள்ள நந்திக்குப் பல்வேறு திருநாமங்கள் உண்டு. அப்படியான நந்திப் பெருமானாரின் வடிவங்களையும் சிறப்புகளையும், திருநாமங்களையும் இங்கு காணலாம்.  *  அதிகார நந்தி: சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப்  பெருமானை வழிபட்டு, கொடிமரத்துக்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக்கொண்ட பின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் நின்று, நந்தியம்பெருமாளின் இரண்டு கொம்புகளுக்கு நடுவில் இறைவனை தரிசிக்க வேண்டும். இந்த நந்தியை அதிகார நந்தி என்பர். இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர்; சிவகணங்களின் தலைவர். * மால்விடை நந்தி: சிவாலயங்களில் கொடி மரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் அதிகார நந்திக்கு அடுத்து ஒரு நந்தி காட்சிதரும். அது மால்விடை எனப்படும் விஷ்ணுநந்த...

தீபங்களின் வகைகள்

Image
 தீபங்களின் வகைகள் 🌟 தூபம் 🌟 தீபம் 🌟 அலங்கார தீபம் 🌟 நாகதீபம் 🌟 விருஷ தீபம் 🌟 புருஷா மிருக தீபம் 🌟 சூலதீபம் 🌟 கமடதி (ஆமை) தீபம் 🌟 கஜ (யானை) தீபம் 🌟 வியக்ர (புலி) தீபம் 🌟 சிம்ஹ தீபம் 🌟 துவஜ (கொடிமர ) தீபம் 🌟 மயூர (மயில்)தீபம் 🌟 பூரண கும்ப (5 தட்டு) தீபம் 🌟 நட்சத்திர தீபம் 🌟 மேரு தீபம் விளக்கை குளிர வைத்தல் : 🌟 விளக்கை எக்காரணத்தைக் கொண்டும் வாயால் ஊதி அணைக்கக்கூடாது. கையால் வீசியும் அணைக்கக்கூடாது. புஷ்பத்தைக் கொண்டும் குளிரவைக்கக்கூடாது. புஷ்பத்தை நெருப்பில் கருகக்கூடாது. திரியை உட்பக்கமாக இழுத்துக் குளிர வைப்பதே நன்மை தரும் அல்லது பசும்பால் இரண்டு சொட்டு வைத்து சாந்தி செய்யவும்.

தீபங்கள்

Image
குத்துவிளக்கில் தீபம் ஏற்றுவதால் உண்டாகும் பலன்கள் 🌟 ஒரு முகம் - மத்திமம் 🌟 இருமுகம் - கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும் 🌟 மூன்று முகம் - குடும்ப விருத்தி உண்டாகும் 🌟 நான்கு முகம் - மனை மற்றும் கால்நடை லாபம் உண்டாகும் 🌟 ஐந்து முகம் - சகல சௌபாக்கியம் உண்டாகும் காமாட்சி விளக்கு : 🌟 காமாட்சி விளக்குஇ எல்லோரின் வீட்டில் இருக்கக்கூடிய விளக்கு ஆகும். புதுமண பெண்ணுக்கு தாயார் வீட்டு சீதனமாக இரண்டு குத்து விளக்கும்இ ஒரு காமாட்சி விளக்கும் கொடுப்பது தமிழர் தங்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். சுபப் பொருட்களில் ஒன்றாக காமாட்சி விளக்கு கருதப்படுகிறது. பாவை விளக்கு : 🌟 பாவை என்பது பெண்ணை குறிக்கிறது. அதாவது இறைவனின் திருவுருவங்களுக்கு முன்னால் இரண்டு பெண்கள் விளக்கை ஏந்தி ஒளி கொடுப்பதற்காக அமைக்கப்பட்டு இருக்கும். மாவிளக்கு : 🌟 புரட்டாசி மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளுக்கு போடப்படும் விளக்கு. புரட்டாசி மாதத்தில் வரும் எல்லா சனிக்கிழமையும் போடப்படுவது சிறப்பாகும்..🌺

திருமுறை

Image
சைவ மரபில் தெய்வத் தன்மை வாய்ந்த அருள் நூல்கள் பன்னிரண்டு எனப் பெரியோரால் தொகுக்கப்பட்டுள்ளன. அவையே திருமுறை. ராஜராஜசோழன் தமிழுக்குச் செய்த பெரும் தொண்டு, தேவாரத் திருப்பதிகங்களை தேடி, அவை தில்லை நடராஜப் பெருமான் ஆலய அறை ஒன்றில் அடைந்து கிடந்து, கரையானுக்கு இரையாகி வரும் செய்தி அறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்தது! ஆலய தீட்சிதர்கள், தேவாரத்தைப் பாடித் தந்த அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவரும் நேரில் வந்தால்தான் சுவடிகளைத் தருவோம்' என்று வல்லடி வழக்கு' பேசினர். மன்னன் நினைத்திருந்தால் அவர்களை சிறையில் பூட்டி, பாடல்களைப் பறிமுதல் பண்ணியிருக்கலாம்.  தூய சிவபக்தன் ராஜராஜன். தஞ்சைப் பெரிய கோயில் கண்டவன். அதனால் அராஜகத்தில் இறங்காமல், மூவர் திருமேனியையும் கோயிலுக்கு எடுத்த வந்து நிறுத்தி, இதோ, தேவாரம் பாடியோர் வந்துவிட்டார்கள். சுவடியைக் கொடுங்கள்' என்று கேட்டுப் பெற்றான். அதனால் நமக்குக் கிடைத்தது அமிழ்தினும் இனிய ஆன்மிகப் பனுவல் - தேவாரம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் அருளிய தேவாரங்களும், மாணிக்க வாசகர் அருளிய திருவாசகமும், திருச்சிற்றம்பலக் கோவையார், திருமாளிகைத...